மின்னேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவௌ, கல்லோயா பகுதியில், தனிப்பட்ட தகராறு காரணமாக மாமனாரால், மருமகன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று இரவு இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த நபர் மின்னேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரொட்டவௌ, கல்ஓயா பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன், சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

