கிழக்கு மாகாணத்தில் பரவிவரும் டெங்கு தொற்றை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு விசேட வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
திருகோணமலையின் கிண்ணியா பிரதேசத்தில் பரவ ஆரம்பித்த டெங்கு நோய் தற்போதைய நிலையில் பல்வேறு பிரதேசங்களுக்கு பரவலடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் கிண்ணியாவில் சுத்திகரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை டெங்கு தொற்று காரணமாக கிழக்கு மாகாணத்தில் கர்ப்பிணி பெண், சிறுமிகள், குழந்தை என பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

