சர்வதேச நீதிவிசாரணையின் மூலமே தமிழ் மக்களுக்கு தீர்வு

211 0

தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்று கிடைக்க வேண்டுமானால் சர்வதேச நீதிவிசாரணைக்குழு இலங்கையில் அமைக்கப்படுவது காலத்தின் கட்டாயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அம்பாறை திருகோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு எல்லா ஆட்சியாளர்களும் முன்வர தயக்கம் காட்டியே வருகின்றனர்.

இந்தநிலையில் நீதியான, நிரந்தரமான தீர்வு ஒன்று கிடைக்க வேண்டுமென்றால் ஜக்கிய நாடுகள் சபையின் பொறிமுறைகளுக்கு அமைவான நீதி விசாரணைக்குழு இலங்கையில் அமைக்கப்படவேண்டும்.

அவ்வாறு அமைக்கப்படும் பட்சத்திலேயே உண்மையான, நீதியான நிலையான தீர்வை எட்டமுடியும்.

கடந்த காலங்களில் ஜக்கிய நாடுகள் சபையினால் பலதரப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

எனினும், அவை சரியான முறையில் இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.