அம்பாறையில் சருகுப்புலிக் குட்டி விபத்தில் சிக்கி உயிரிழப்பு

45 0
அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி, காரைதீவு பகுதிகளை இணைக்கும் பிரதான வீதியில் சருகுப்புலி அல்லது காட்டுப்பூனை இனத்தை சேர்ந்த விலங்கின் குட்டி ஒன்று விபத்தில் சிக்கி நேற்று (24) உயிரிழந்துள்ளது.

மக்கள் வசிக்கும் அந்த பகுதியில் நேற்றிரவு சருகுப்புலி உள்நுழைந்து கிராமவாசிகளின் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடிய நிலையில் இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சிலர் குறித்த சருகுப்புலி போன்ற பூனை இனங்களை பிடித்து, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.