தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்ற குற்றச்சாட்டு – அட்லாண்டா சிறையில் சரணடைந்தார் டிரம்ப்

124 0
image
தேர்தல்முடிவுகளை மாற்றியமைக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோர்ஜியாவில் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளார்.

நியுஜேர்சியில் உள்ளபெட்மினிஸ்டர் இல்லத்திலிருந்து விமானம் மூலம் புல்டன் சிறைச்சாலையில் ஆஜராவதற்காக டிரம்ப் நியுஜேர்சி சென்றார் .

புல்டன் சிறையில் அவர் குறித்த விபரங்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டன, சிறையில் வைத்து அவரை அதிகாரிகள் புகைப்படம் எடுத்தனர் – அமெரிக்க வரலாற்றில் சிறையில் படமெடுக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதி டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் டிரம்ப பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.