இலங்கை ஊடாக போதைப் பொருள் கடத்தல் – மலேசிய தமிழர் கைது

257 0

இந்தியாவில் இருந்து இலங்கை ஊடாக மலேசியாவுக்கு ஒருவகை போதைப் பொருளை கடத்த முயற்சித்த மலேசிய தமிழர் ஒருவர் பெங்களுரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2.5 கிலோகிராம் எடைகொண்ட போதைப் பொருள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.

குறித்த போதைப் பொருளின் பெறுமதி 90 லட்சம் இலங்கை ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களுரிலிருந்து கொழும்பு வந்து அங்கிருந்து, கோளாலம்பூர் செல்ல குறித்த மலேசிய பொதுமகன் திட்டமிட்டிருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.