மாத்தறை நீதிமன்றத்தின் வழக்குப் பொருளாக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியே திக்வெல்ல கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாம்!

108 0
மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த  துப்பாக்கியொன்றை திக்வெல்ல முதுகமுவ பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி திக்வெல்ல, போடரகந்த பிரதேசத்தில் உயிரிழந்த   மாத்தறை, உயன்வந்த தெற்கு பகுதியைச் சேர்ந்த 45 வயதான முதுகமுவ ஆராச்சி சஞ்சீவ என்பவரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கி என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

மாத்தறை நீதிவான் நீதிமன்ற பி.ஆர். 152/9 இலக்கம் கொண்ட T- 56 துப்பாக்கி மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதுடன், வழக்குப் பொருட்களை வெளியே எடுத்துச் சென்றமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.