சர்வதேச எல்லையில் இந்திய பாதுகாப்புப் படை சுட்டத்தில் பாக். மூதாட்டி பலி

205 0

இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இந்திய பாதுகாப்புப் படை சுட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்திய பாதுகாப்புப் படை சுட்டதில் பாகிஸ்தானைத் சேர்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கோய் ராட்டா என்ற பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிக்கு அருகே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் தண்டி காசி கிராமத்தை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் கோட்லி மாவட்டத்தில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.