யாழ்ப்பாணம் நல்லூர் சென்.பெனடிக்ற் வித்தியாலய மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வாசிப்பு முகாம்(காணொளி)

263 0

யாழ்ப்பாணம் நல்லூர் சென்.பெனடிக்ற் வித்தியாலய மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வாசிப்பு முகாம் இன்று நடைபெற்றது.

பாடசாலையின் ஆங்கில சங்கமும், யாழ்ப்பாண வலய றெஸ்க் நிறுவனமும் இணைந்து சிறுவர்களின் ஆங்கில வாசிப்பு திறனை மேம்படுத்தும் வாசிப்பு முகாம் செயற்றிட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

பாடசாலையில் தரம் 4இல் கல்விகற்கும் மாணவர்கள் அணைவரையும் ஒன்றிணைத்து பொம்மைகள், பொருட்கள் என்பவற்றை கடதாசி மட்டைகளில் உருவாக்கி அவற்றின் ஊடாக கதைகளை மாணவர்களுக்கு கூறும் வகையில் ஆங்கில மற்றும் தமிழ் வாசிப்பு திறன் மேம்படுத்தும் செயற்றிட்டம் நடைபெற்றது.