தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் 35ஆவது ஆண்டு விழாவும்,பரிசளிப்பு நிகழ்வும்…(காணொளி)

354 0

 

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் 35ஆவது ஆண்டு விழாவும்,பரிசளிப்பு நிகழ்வும் துர்க்கை அம்மன் ஆலய அன்னபூரணி மண்டபத்தில் நடைபெற்றது.

மகளிர் இல்லத்தின் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி

க.ஜீவராணி, கௌரவ விருந்தினராக மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி அதிபர் கமலராணி கிருஸ்ணபிள்ளை, பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ், பேராசிரியர் எஸ்.சண்முகதாஸ், பேராசிரியர் ம.சின்னத்தம்பி மற்றும் மகளிர் இல்ல மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மகளிர் இல்லத்தில் நடாத்தப்பட்ட கலை, இலக்கிய போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்காக சான்றிதழ்கள் விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டன

https://youtu.be/RKoLKj17yv0