யாழில் கசிப்பு, கஞ்சா கலந்த மாவாவுடன் இரு இளைஞர்கள் கைது

78 0

கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டை பகுதியில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (20) இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 1,500 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் 21 கிராம் 450 மில்லி கிராம் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.