தமிழ்நாடு அலைசறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு இணைந்து நடத்தும் சர்வதேச லீக் போட்டி மாமல்லபுரத்தில் கடந்த 12ம் தேதி துவங்கியது. இன்று அரையிறுதி மற்றும் இறுதி போட்டியுடன் நிறைவடைந்தது. ஆண்கள் இறுதி போட்டியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த டென்ஷி இவாமி 16.30 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கியான் மார்ட்டின் 14.70 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
பெண்கள் இறுதி போட்டியில் ஜப்பான் நாட்டு வீராங்கனை சாரா வகிதா 13.50 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். ஜப்பான் வீராங்கனை ஷினோ மட்சுடா 13.10 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
இளைஞர் நலன் விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்யா மிஸ்ரா, உறுப்பினர்-செயலர் மேகநாதன், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர், வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

