இலங்கை ஊடாக மலேசியாவிற்கு கடத்தப்படவிருந்த ஒரு தொகை போதைப் பொருட்களுடன் மலேசிய தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரில் உள்ள Kempagowda சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மலேசிய தமிழரான 58 வயதுடைய கோபால் ராம் என்பவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.விமான நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அடிப்படையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து கொழும்பு விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு செல்ல குறித்த நபர் முயற்சித்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரரை, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட போதைப் பொருட்கள் இந்தியா ரூபாவில் 40 இலட்சம் பெறுமதியுடையது என குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, சம்பவம் தொடர்பில் இந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.