விடுதியின் 3 ஆவது மாடியிலிருந்து விழுந்து தியகம தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் படுகாயம்

204 0
தியகம தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஒருவர் விடுதியின் 3 ஆவது மாடியிலிருந்து விழுந்து பலத்த காயங்களுக்குள்ளான நிலையில்,ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் அந்தக் கல்லூரியின் தகவல் தொழிநுட்பத்துறையில் 3 ஆம் வருட மாணவன் என கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயங்களுக்குள்ளான மாணவன் ரிகில்லகஸ்கட பிரதேசத்தில் வசிப்பவர் ஆவார்.

சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.