வட்டலையில் பாரவூர்தி குடை சாய்ந்ததில் ஒருவர் படுகாயம்

233 0

கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் வட்டவலை பகுதியில் பாரவூர்தியொன்று குடை சாய்ந்ததில் ஒருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அகரப்பத்தனை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி இனிப்பு பானங்கள் ஏற்றிச்சென்ற பாரவூர்தியே வட்டவலை ரொசல்லை பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தில் ஏற்பட்ட திடீர் கோளாரே விபத்துக்கான காரணமென்றும் காயமுற்ற சாரதி வட்டவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை தொடர்வதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்