மைத்திரிபால சிறிசேன நாளை ரஷ்யா செல்கிறார்

231 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை ரஷ்யாவிற்கு செல்ல உள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பை ஏற்றே ஜனாதிபதி அங்கு செல்ல உள்ளார்.

எதிர்வரும் 24ம் திகதி வரை ஜனாதிபதி ரஷ்யாவில் தங்கியிருக்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் பொருளாதா துறை சார்ந்த ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட உள்ளன. அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, ஜோன் அமரதுங்க மற்றும் எஸ். பி் நாவின்ன உள்ளிட்ட அமைச்சர்களும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் பங்கேற்க உள்ளனர்.