கண்டி தர்மராஜா மாணவன் மகாவலி கங்கையில் மூழ்கி பலி

213 0

கண்டி தர்மராஜா வித்தியாலயத்தின் 11 ஆவது வருட மாணவர் ஒருவர்,  இன்னும் சிலருடன் சென்று மகாவலி கங்கையில் குளிக்கச் சென்ற போது நீரிழ் மூழ்கி காணாமல் போயுள்ளதாக கட்டுகஸ்தொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி தர்மராஜா பாடசாலை மற்றும் கிங்ஸ்வுட் பாடசாலை என்பவற்றுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி நிறைவின் பின்னர் குளிக்கச் சென்ற போதே இவ்வாறு மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளான்.

16 வயதுடைய டிலந்த முதலிகே எனும் மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளான்.

குறித்த மாணவனைத் தேடும் பணிகள் இன்று காலை முதல் கடற்படையினரின் உதவியுடன் இடம்பெறுவதாகவும் கட்டுகஸ்தொட்டை பொலிஸார் கூறியுள்ளனர்