மேல் மாகாண தெற்கு குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் பல்வேறு கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராஜகிரிய களுபலுவாவ பகுதியில் வீடொன்றினை உடைத்து 268 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள், மற்றும் இரத்தினக்கற்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு தொடர்பிருப்பதாகவும் மேல் மாகாண தெற்கு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் 924 இரத்தினக்கற்கள், பித்தளை உபகரணங்கள், வெக்கும் க்ளீனர் இயந்திரங்கள், மின்விசிறிகள், 08 கைக்கடிகாரங்கள், ஐந்து தங்க மாலைகள், நான்கு தோடு சோடிகள், 02 தங்க பெண்டன்கள், 10 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் மடிக்கணினியொன்றும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் வெலிக்கடை காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று அழுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025 -
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

