மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் பிரதேசத்தில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (15) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த யானை 35 வயதுடையது எனவும் இதனை வைத்திய பரிசோதனைக்கு பின்னர் இறந்தமைக்கான காரணம் தெரியவரும் எனவும் அதன் பின்னர் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

