சீனாவில் பாலத்தில் மோதிய விமானம்; 5 பேர் பலி

394 0

Tamil_News_large_1568488_318_219சீனாவில் நீரிலும் வானத்திலும் செல்லக்கூடிய ஆம்பிபியன் விமானம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாயினர்.

சீனாவின் அரசு விமான சேவை நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏ.வி.ஐ.சி., ஜாய் ஜெனரல் ஏவியேசன் நிறுவனம், நீரிலும் வானத்திலும் செல்லக்கூடிய ஆம்பிபியன் விமான சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டியதால், விமான சேவையை துவங்க ஒப்புதல் பெற்றது. இதனையடுத்து ஷாங்காயின் ஜின்ஷான் மாவட்டத்திலிருந்து ஜோஷான் நகருக்கு புறப்பட்ட ஆம்பிபியன் விமானத்தின் முதல் பயணத்தில் 10 பேர் பயணமாகினர்.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எதிர்பாராதவிதமாக விமானம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலியாயினர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 4 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.