கடற்கொள்ளையர்களுக்கு ஆங்கில மொழி தெரியாமையினால் நடந்த விடயம்

268 0

சோமாலிய கடற்கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்ட கப்பலிலுள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்களை பாதுகாப்பாக மீற்க அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினருக்கு வரவேற்பு நிகழ்வொன்று பொஸாஸோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சோமாலிய அமைச்சர்கள் மற்றும் பொஸாஸோ ஆளுநர் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட கப்பல், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று இரவு பொஸாஸோ நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

குறித்து கடற் கொள்ளையர்களுக்கு ஆங்கில மொழி தெரியாமையானது, கப்பலை விடுவிக்கும் நடவடிக்கைகளில், சோமாலிய பாதுகாப்பு தரப்பினருடன் தமக்கு தொடர்புகளை ஏற்படுத்த வாய்ப்பாக இருந்ததாக கப்பலின் பிரதான பொறியிலாளர் ஜயந்த களுபோவில தெரிவித்தார்

சோமாலிய பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதல்களால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் குறித்த கடற்கொள்ளையர்கள், தாம் கொள்ளையிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.