பாதாள உலக குழு தலைவர் ‘சமயங்’ உள்ளிட்ட 7 பேரை கொலை செய்த சம்பவத்துக்கு உதவியவர்கள் என சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேரில் பெண் ஒருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களுத்துறை நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டபோதே அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மற்றுமொரு சந்தேகத்துக்குரியவரை தடுத்து வைத்து விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைப் பேருந்து தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு அடைக்கலம் வழங்கிய காலி – வலஹன்துவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் வேவுபார்த்த பாணந்துறை பிங்வத்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலை வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சமயங் உட்பட ஐந்து கைதிகள் மற்றும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.