தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது வெளிநாட்டிலுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன இணைந்து செயற்படுத்தவுள்ளன.
சொந்த நிலத்தில் வீடு அமைத்தல், சொந்த காணிகள் இல்லாத வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு நகரப் பகுதிக்கு வெளியே தாம் விரும்பிய இடத்தில் வீடுகளை அமைத்துக் கொடுத்தல், மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை அமைத்தல் போன்ற மூன்று துறைகளில் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

