ஒரே வயதை சேர்ந்த இரு சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்

226 0
குருநாகல் வாரியபொல மற்றும் காலி கரந்தெனிய பிரதேசங்களைச் சேர்ந்த 14 வயதான இரு சிறுமிகள் காணாமல்போய் உள்ளனர்.
இதில் காலி கரந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த சிறுமி கடந்த 9ஆம் திகதி தனது தாயாருக்கு உதவியாக அல்பிற்றிய மருத்துவ மனையில் இருந்த போது காணாமல் போயுள்ளார்.
இதேவேளை, வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த சிறுமி கடந்த 11ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.
குருநாகல் நகர பகுதியில் உள்ள தனியார் வகுப்பிற்கு சென்ற நிலையில், குறித்த மாணவி காணாமல் போய் உள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்