இயற்கையை, தாம் அழிவுறச் செய்தால், அது தம்மை அழிக்கும் – அனுர

241 0
இயற்கையை, தாம் அழிவுறச் செய்தால், அது தம்மை அழிக்கும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இயற்கையைப் பாதுகாப்பது அனர்த்தத் தடுப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு மட்டுமுள்ள கடமையல்ல.
தம்மால் முடிந்தளவு அலுவலர்களும், பொது மக்களும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்.
இந்தக் கடமையை செய்யத் அனைவரும் தவறினால், எதிர்காலத்தில் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என்பதை மறக்கக் கூடாது என அமைச்சர் அனுர பிரியதர்ஷண யாபா தெரிவித்துள்ளார்.