புதிய அரசியல் கூட்டணியை தடுத்து நிறுத்த பஷில் வியூகம்

145 0

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் உள்­ளக அர­சியல் கொந்­த­ளிப்­புகள் நாளுக்கு நாள் தீவி­ர­ம­டை­வ­தற்கு பிர­தான கார­ண­மாக புதிய அர­சியல் கூட்­ட­ணிக்­கான முயற்­சியே காணப்­ப­டு­கின்­றது. ஆளும் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் புதிய கூட்­ட­ணிக்­கான திட்டப் பணி­களை முன்­னெ­டுக்­கின்­ற­மை­யினால் பொது­ஜன பெர­மு­னவின் அர­சியல் எதிர்­காலம் என்­பது நாளுக்கு நாள் கேள்­விக்­கு­றி­யாகி வரு­கி­றது.

குறிப்­பாக இந்த நிலை­மை­யா­னது ராஜ­பக்ஷர்­களின் அர­சியல் எதிர்­கா­லத்­திற்கும் சவால்­களை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளன. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் பொது­ஜன பெர­மு­னவின் தேசிய அமைப்­பாளர் பஷில் ராஜ­பக் ஷ, ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­தித்து கலந்­து­ரை­யாடி உள்ளார். இந்தச் சந்­திப்பு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு இடம்­பெற்­றுள்­ளது.

பஷில் வியூகம்

‘பொது­ஜன பெர­மு­னவின் முழு­மை­யான ஆத­ரவை ஏற்­க­னவே உங்­க­ளுக்கு வழங்கி உள்ளோம். எனவே ஆளும் கட்­சிக்குள் இருந்­து­கொண்டே புதிய கூட்­ட­ணி­ய­மைக்கும் முயற்­சி­களை நிறுத்த வேண்டும்’ என்று இதன் போது பஷில் ராஜ­பக்ஷ, ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

இவற்றை செவி­மெ­டுத்த ஜனா­தி­பதி ரணில், ‘பொது­ஜன பெர­முனவின் உள்­ளக அர­சியல் விட­யங்­களில் தலை­யி­டு­வது எந்­த­ளவில் பொருத்­த­மா­ன­தாக இருக்கும் என்று புரி­ய­வில்லை’ என கூறி சிறு புன்­ன­கை­யுடன் கருத்து கூறு­வதை நிறுத்தி கொண்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

புதிய கூட்­டணி குறித்து தீர்க்­க­மா­ன­தொரு தீர்­மா­னத்தை எடுக்­கா­விடின் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவுக்குள் அநா­வ­சி­ய­மான சிக்­கல்கள் அதி­க­ரித்து உள்­ளக நெருக்­க­டிகள் தீவி­ர­ம­டையும். எனவே நிமல் லான்சா போன்­ற­வர்­களை அழைத்து உடன் பேசு­மாறு  பஷில் ராஜ­பக்ஷ, ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் வலி­யு­றுத்தி கேட்­டுக்­கொண்­டுள்ளார்.

எதிர்­கால தேர்­தல்­களை மையப்­ப­டுத்தி உரு­வாக்­கப்­பட்டு வரும் இப்புதிய அர­சியல் கூட்­ட­ணியை எவ்­வா­றேனும் தடுத்து விட வேண்டும் என்ற வகையில் பஷில் ராஜ ­பக்ஷ தற்­போது செயற்­படத் தொடங்­கி­யுள்ளார். பொது­ஜன பெர­மு­னவில் உள்ள தனது விசு­வா­சி­களை கொண்டு புதிய அர­சியல் கூட்­ட­ணிக்கு எதி­ரான வியூ­கங்­களை பஷில் வகுத்­துள்ள நிலையில், இதன் எதி­ரொலி ஓரிரு வாரங்­களில் வெளிப்­படும்.

அதி­ருப்­தியில் லான்சா குழு

ஜனா­தி­பதி ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வு­ட­னான பஷில் ராஜ­பக்ஷவின் சந்­திப்பு குறித்தும், புதிய அர­சியல் கூட்­ட­ணிக்கு எதி­ரான பஷில் ராஜ­பக்ஷவின் செயல்­பா­டுகள் தொடர்­பிலும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நிமல் லான்சா குழு­வி­ன­ருக்கு தகவல் கசிந்­துள்­ளது. பஷில் ராஜ­பக்ஷவின் கோரிக்­கைகள் குறித்து ஜனா­தி­ப­தி­யிடம் நேர­டி­யா­கவே கடும் அதி­ருப்­தியை தெரி­வித்­துள்ள நிமல் லான்சா குழு­வினர், எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் முதல் புதிய கூட்­ட­ணியின் அர­சியல் செயல்­பா­டு­களை ஆரம்­பிக்கப்போவ­தாக அறிவித்­துள்­ளனர்.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் அதி­ருப்­தி­யா­ளர்­கள் மற்றும் பாரா­ளு­மன்­றத்தில் சுயா­தீ­ன­மாக செயல்­படும் தரப்­பி­னர்­க­ளா­லேயே இந்தப் புதிய அர­சியல் கூட்­டணி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்தக் கூட்­ட­ணி­யுடன் இணைந்து செயல்­ப­டு­வ­தற்கு குமார வெல்­கம தலை­மை­யி­லான தரப்­பி­ன­ரு­டனும்  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஆத­ரவை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டனும் பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக நிமல் லான்சா தெரி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

13 குறித்த ஜனா­தி­ப­தியின் விசேட அறி­விப்பு

2024ஆம் ஆண்டு முதல் காலாண்டில் தேசியத் தேர்தல் ஒன்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற நிலையில் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு மற்றும் 13ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் என்று மீண்டும் பேச்­சுக்கள் அடிப்­பட தொடங்­கி­யுள்­ளன. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் 13ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை வலுப்­ப­டுத்­தவும் செயல்­ப­டுத்­தவும் தேவை­யான அனைத்து யோச­னை­க­ளையும் உள்­ள­டக்­கிய பிரே­ர­ணையை இவ்­வாரம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்­ப்பிக்க உள்­ள­தாக ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

அது மாத்­தி­ர­மன்றி 13ஆவது திருத்தத்தில் உள்ள அதி­கா­ரப்­ப­கிர்வு குறித்து விசேட அறி­விப்பை எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் வெளி­யிட ஜனா­தி­பதி தயா­ராகி வரு­வ­தாகவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதன்­போது பொலிஸ் அதி­காரம் தவிர்த்து ஏனைய அதி­கா­ரங்­களை அனைத்து மாகா­ணங்­க­ளுக்கிடையில் எவ்­வாறு பகிர்ந்­த­ளிப்­பது என்­பது குறித்து முக்­கிய அறி­விப்பை ஜனா­தி­பதி வெளி­யிட உள்ளார்.

எவ்­வா­றா­யினும் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­பதில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உட்­பட சிறு­பான்மை கட்­சி­க­ளி­டையே ஏகோ­பித்த இணக்­கப்­பாடு ஒன்று இல்லை என்றும் பிர­தான எதிர்க்­கட்சி உட்­பட பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் அனைத்து கட்­சி­களும் பல்­வேறு வகையில் தடை­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்ற நிலை­யி­லேயே ஜனா­தி­பதி ரணில், 13 குறித்து முக்­கிய பிரே­ர­ணையை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்க திட்­ட­மிட்­டுள்ளார்.

புதிய அர­சியல் கூட்­டணி

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வுக்கு எதி­ரான கூட்­டணி குறித்து அர­சியல் களத்தில் பல்­வேறு இர­க­சிய சந்­திப்­புகள் மற்றும் நகர்­வுகள் மிக வேக­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில், கொழும்பு-5, மஹா­க­ம­சே­கர மாவத்­தையில் அமைந்­துள்ள அமைச்சர் மஹிந்த அம­ர­வீ­ரவின் இல்­லத்தில் முக்­கிய சந்­திப்பு ஒன்று கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மாலை இடம்­பெற்­றுள்­ளது.

இந்த சந்­திப்பில் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா, ஜோன் சென­வி­ரட்ன, அநுர பிரி­ய­தர்ஷன யாபா, சுசில் பிரே­ம­ஜ­யந்த, நிமல் லான்சா, நளின் பெர்­னாண்டோ, லசந்த அழ­கி­ய­வண்ண, பிரி­யங்­கர ஜய­ரத்ன மற்றும் துமிந்த திசா­நா­யக்க உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

புதிய அர­சியல் முன்­னெ­டுப்­புகள் குறித்த பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் இதன்­போது பேசப்­பட்­டுள்­ளது. ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன தற்­போது எடுக்கும் அர­சியல் ரீதி­யி­லான பல தீர்­மா­னங்கள் தோல்­வி­களை சந்­தித்து வரு­வ­தாக இதன்­போது தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிரி­யங்­கர ஜய­ரத்ன, புதிய கூட்­ட­ணிக்­கான முயற்­சி­களை நிறுத்­து­வ­தற்கு பஷில்   கடு­மை­யாக முயற்­சித்தும், பல தரப்­பி­ன­ரிடம் கோரிக்கை விடுத்தும் வரு­வ­தாக கூறினார்.

இவற்றை நாம் பொருட்­ப­டுத்தக் கூடாது. எது நடந்­தாலும் முன்­னோக்கிச் செல்ல வேண்­டி­யது மிகவும் அவ­சி­ய­மாகும். எமக்கு ஆத­ர­வ­ளிக்க விரும்பாத பலரும் தற்­போது முன்­வந்­துள்­ளமை உத்­வே­க­ம­ளிப்­ப­தாக அநுர பிரி­ய­தர்ஷன யாப்பா இதன்­போது தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இதனை தொடர்ந்து கருத்து தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோன் சென­வி­ரத்ன, ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன உறுப்­பி­னர்கள் பலர் புது­மை­யான விட­யங்கள் குறித்து பேசு­கின்­றனர். ஆரம்ப நிலையை உண­ராத வகை­யி­லேயே அவர்கள் கருத்து கூறு­கின்­றனர் என்று கூறிய போது, அதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா, வீதியில் நடந்து செல்லக் கூட முடி­யாத அளவில் அர­சியல் ரீதியில் தோல்­வியை சந்­தித்த பின்­னரும் கூட இவ்­வா­றான வீராப்பு பேச்­சுக்கள் இவர்­க­ளுக்கு தேவை தானா என்று கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

கடந்த காலங்­களில் ஏற்­பட்ட அர­சியல் கொந்­த­ளிப்­பு­களை தணிப்­ப­தற்கு ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கொண்ட செயற்­பா­டு­க­ளையும் தீர்­மா­னங்­க­ளையும் மறந்து விட இய­லாது. நாட்டில் அமை­தியை ஏற்­ப­டுத்தி அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு சுதந்­தி­ர­மாக செயற்­ப­டு­வ­தற்­கான சூழலை உரு­வாக்­கிய ஜனா­தி­ப­திக்கு, நன்றி மறந்­த­வர்­க­ளாக பொது­ஜன பெர­மு­னவின் உறுப்­பி­னர்கள் செயல்­படு­கின்­றமை வெட்­கப்­பட வேண்­டிய  விட­ய­மாகும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நிமல் லான்சா இதன்­போது கூறி­யுள்ளார்.

மீண்டும் ‘அப்பம்’

மாலை 6.00 மணிக்கு ஆரம்­பிக்­கப்­பட்ட இந்தக் கலந்­து­ரை­யாடல் 8 மணி வரை நீடித்த நிலையில், அமைச்சர் மஹிந்த அம­ர­வீர வருகை தந்­த­வர்­க­ளுக்கு இரவு போஷ­னத்தை ஏற்­பாடு செய்­தி­ருந்தார். அனை­வரும் உணவு உண்­ணு­வ­தற்கு தயா­ரான நிலையில், மஹிந்த அம­ர­வீ­ரவின் வீட்டில் ‘அப்பம்’ இல்­லாமல் இருக்­காது. உண்­ணு­வ­தற்கும் அச்­ச­மா­கவே உள்­ளது என்று அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த புன்­ன­கை­யுடன் அர­சியல் சாடை­மொ­ழியில் கருத்து வெளி­யிட்­டுள்ளார்.

இவ்­வாறு நடப்பு அர­சியல் குறித்து பல தக­வல்­களை பரி­மா­றிக்­கொண்டு இராப்­போ­ஷ­னத்தில் கலந்­து­கொண்­டி­ருந்த அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் புதிய அர­சியல் கூட்­ட­ணியின் பிர­சார நட­வ­டிக்­கைகள் மற்றும் எதிர்­கால திட்­டங்கள் குறித்து கலந்­து­ரை­யாடத் தொடங்­கினர்.

புதிய அர­சியல் கூட்­டணி குறித்து பெயர் குறிப்­பிடா விடினும், அது குறித்த பிர­சார நட­வ­டிக்­கைகள் பல தரப்­பினர் மத்­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. தொகுதி அள­விலும் மாவட்ட ரீதி­யா­கவும் விசேட கூட்­டங்கள் ஏற்­க­னவே முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. ஜா-எல ரன்ரீச் ஹோட்­ட­லிலும் கடந்த சனிக்­கி­ழமை வெற்­றி­க­ர­மாக கூட்டம் இடம்­பெற்­ற­தாக நிமல் லான்சா இதன் போது கூறினார்.

கம்­பஹா மாவட்­டத்தை மையப்­ப­டுத்தி இடம்­பெற்ற இந்தக் கூட்­டத்­தில் 13 தேர்தல் தொகு­தி­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி 50க்கும் மேற்­பட்ட அமைப்­பா­ளர்கள் கலந்­து­கொண்­ட­தாக அமைச்சர் நளின் பெர்­னாண்டோ தெரி­வித்தார். அத்­துடன் அனைத்து மாவட்­டங்­க­ளையும் உள்­ள­டக்கும் வகையில் தொகுதி அமைப்­பா­ளர்­களை நிய­மித்து புதிய அர­சியல் கூட்­டணி குறித்து தெளி­வு­ப­டுத்­தல்­களை விரை­வு­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் நிமல் லான்சா குறிப்­பிட்டார்.

ராஜ­கி­ரிய, இல. 118 அலு­வலம்

ராஜ­கி­ரிய, லேக் டிரைவ் வீதி, 118 என்ற இடத்தில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள அர­சாங்­கத்தின் கொள்கை பரப்பு அலு­வ­லகம் குறித்து கடந்த வாரம் குறிப்­பிட்­டி­ருந்தோம். இந்த அலு­வ­ல­கத்தில் கடந்த வாரம் பல்­வேறு திட்­டங்கள் குறித்து ஆரா­யப்­பட்­ட­துடன் சந்­திப்­புக்­களும் இடம்­பெற்­றி­ருந்­தன. புதிய அர­சியல் கூட்­ட­ணியில் இணையும் உறுப்­பி­னர்­க­ளுக்கு அங்­கத்­துவ அட்டை அலு­வ­ல­கத்தின் ஊடா­கவே வழங்­கப்­ப­டு­கின்­றது.

பொது­ஜன பெர­மு­ன­வுக்கு ஆத­ர­வ­ளித்­தி­ருந்த முன்னாள் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்கள், தொழிற்­சங்க உறுப்­பி­னர்கள் என பலர் புதிய அர­சியல் கூட்­ட­ணிக்கு ஆத­ரவு வழங்க முன் வந்­துள்­ளனர்.

அது மாத்­தி­ர­மன்றி மற்­று­மொரு முக்­கி­ய­மான விடயம், முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டாபய ராஜ­பக் ஷவின் செய­லா­ள­ராக செயற்­பட்ட சுகீஸ்­வர பண்­டார மற்றும் பஷில் ராஜ­பக்ஷவின் தீவிர செயல்­பாட்­டா­ள­ரான எஸ். அம­ர­சிங்க ஆகி­யோரும் ராஜ­கி­ரிய, இல. 118 அலு­வ­ல­கத்­துடன் இணைந்­துள்­ளமை பொது­ஜன பெர­மு­ன­வுக்கு பெரும் நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இணை அமைப்­பு­களை புதிய அர­சியல் கூட்­ட­ணியில் இணைத்­துக்­கொள்ளும் வகையில் சுகீஸ்­வர பண்­டார மற்றும் எஸ். அம­ர­சிங்க ஆகியோர் செயல்­பட்டு வரு­கின்­றனர்.

எம்.பி.யாகும் ஆசையில் முஜிபுர்

கொழும்பு மாந­கர சபையை நம்பி பாரா­ளு­மன்­றத்தை கைவிட்ட முஜிபுர் ரஹ்­மானின் இன்­றைய கோரிக்கை, தேசிய பட்­டி­யலில் என்னை உள்­வாங்­குங்கள் என்­ப­தா­க­வுள்­ளது. டயா­னாவின் ஆசனம் காலி­யா­குவதில் நிறைய சட்டச் சிக்­கல்கள் இருக்­கின்­றன. ஆகவே இப்­போ­தைக்கு தேசிய பட்­டி­யலில் உறுப்­பி­னர்­க­ளாக உள்ள இம்­தியாஸ் பாக்கீர் மாக்கர் அல்­லது மயந்த திசா­நா­யக்க ஆகிய இரு­வரில் ஒரு­வரை இராஜி­னாமா செய்யச் சொல்லி, அதை தனக்கு தரும்­படி முஜிபுர் மறை­மு­க­மாக கோரி வரு­கின்­றாராம்.

அவ­ரது கோரிக்­கையில் நியாயம் உள்­ளது. அவர் பாரா­ளு­மன்­றத்தில் சிறப்­பான எம்.பியாக இருந்தார் என கூட்­டணி சிறு­பான்மை கட்சித் தலை­வர்கள் இதற்கு பச்சைக் கொடி காட்­டி­யுள்­ளனர். விரைவில் சஜித்­துடன் பேச வும் உள்­ள­னராம்.

நாம­லுக்­காக ரணிலை ஆத­ரிக்க முயலும் மஹிந்த

மொட்டு கட்­சியில் உள்ள ராஜ­பக்ஷ அணி, நாமலின் எதிர்­காலம்  அவர் அடுத்த பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சி தலைவர் ஆவ­தில்தான் உறு­திப்­படுத்தப்படும் என நம்­பு­கி­றது. பஷில் வேறு மாதிரி திட்டம் போட்­டாலும், மஹிந்­தவின் நோக்கம் இது­தானாம். சஜித், அனுர வந்து விட்டால், நாமலின் எதிர்­காலம் முடி­வுக்கு வந்து விடும் என்­பதால், ரணில் தொடர்ந்து ஜனா­தி­ப­தி­யாக இருக்க வேண்டும் எனவும் எண்­ணு­கிறார் மஹிந்த. இதனால், ரணில் சொல்லி, விக்கி வெளி­யிட்ட ‘பொல்­லு­ பொலிஸ்’ அதி­கா­ரத்­துடன் கூடிய 13ஐ மஹிந்த ஆத­ரிக்கக்கூடும் என்று அர­சியல் வட்­டா­ரங்­களில் பேசப்­ப­டு­கின்­றது.

வடக்கு – கிழக்கில் மாகா­ண­ சபை தேர்­தலும் நடக்­கலாம். அதை தொடர்ந்து ரணில், தமிழ், முஸ்லிம் கட்­சிகள் ஆத­ர­வ­ளிக்க, மொட்டுக் கட்­சியின் மஹிந்த அணி, ஐக்­கிய மக்கள் சக்தியில் இருந்து பிரிந்து வரு­ப­வர்கள் அணி, ஏற்­க­னவே அரசில் இருந்து பிரிந்து எதி­ர­ணியில் இருக்கும் அணி ஆகி­ய­வற்றின் ஆத­ர­வுடன் பெரிய கூட்­டணி அமைத்து ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தேர்­த­லுக்கு போக எண்­ணு­கிறார்.

ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான சட்ட திருத்­தத்தை பாரா­ளு­மன்றம் நிரா­க­ரிக்­கவும் முடி­யாது. பாரா­ளு­மன்ற தேர்­தலில் மஹிந்த அணி ரணி­லுடன் இணை­யாது. இவ்­வாறு ஜனா­தி­பதி தேர்­தலை சந்­தித்து வெற்றி பெறு­வ­தற்கு ஐக்­கிய தேசியக் கட்சி வியூகம் அமைத்து வரு­கின்­றது.

கட்­சியின் செயற்­குழுக் கூட்டம் கடந்த வாரம் இடம்­பெற்ற போது, செயற்­கு­ழுவின் உறுப்­பி­னர்­க­ளாக அமைச்­சர்­க­ளான ஹரின் பெர்­னாண்டோ, மனுஷ நாண­யக்­கார ஆகியோர் இணைத்துக் கொள்­ளப்­பட்­டுள்­ளனர். எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 10ஆம் திகதி ஐக்­கிய தேசியக் கட்­சியின் சம்­மே­ளனக் கூட்டம் மிகப் பெரும் எடுப்பில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. மாவட்­டங்கள் தோறும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் கூட்­டங்கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வாறு முன்­னோக்கிச் சென்று ஜனா­தி­பதி தேர்­தலில்  ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வெற்­றியை உறு­திப்­ப­டுத்துவதற்கான  நட­வ­டிக்­கைகளை ஐக்­கிய தேசியக் கட்சி எடுத்து வரு­கின்­றது.

ஜே.வி.பி. தலை­வர்­க­ளுடன் பொது வேட்­பாளர் குறித்து பேச்சு

ஐக்­கிய மக்கள் சக்­தியின் இரண்டு பங்­காளி சிறு­பான்மைக் கட்சி தலை­வர்கள், ஜே.வி.பி. தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க, செய­லாளர் டில்வின் சில்வா ஆகி­யோரை வியா­ழக்­கி­ழமை இரவு சந்­தித்து உரையாடி உள்ளனர்.

எதிரணிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்க முடியுமா என்பது குறித்து இங்கு பேசப்பட்டுள்ளது. அதற்கான வாய்ப்பு இல்லாவிட்டால் ரணில் மீண்டும் ஜனாதிபதியாவதை தடுக்க முடியாது என இங்கு பொதுக் கருத்து ஏற்பட்டுள்ளது.

ஆனால், 2005, 2010, 2015 ஆண்டுகளில் பெற்ற கசப்பான அனுபவங்கள் காரணமாக இனியும் பொதுக் கூட்டணி என்ற ஏற்பாட்டு க்கு செல்ல ஜே.வி.பி தலைவர்கள் தமது தயக்கத்தை வெளிக்காட்டியுள்ளனர்.

பொது எதிரணிக் கூட்டில் ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி இரண்டும் இடம் பெறாவிட் டால் இதுபற்றி பேசி பயனில்லை என சிறுபான்மைக் கட்சித்  தலைவர்கள் கறாராக கூறி விட்டார்கள். இந்த உரையாடலை தொடர்வோம் என்ற முடிவுடன் சந்திப்பு நிறைவடைந்துள்ளது.

பேசுபொருளாக மாறிய ­­­­­மனோவின் கருத்து

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கடந்த வாரம் வடக்குக்கு சென்றிருந்தார். அங்கு அவர் வடக்கு, கிழக்குக்கு மட்டுமாவது மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்திடம் ஒன்றிணைந்து கோருவோம் என்ற கருத்தை பல்வேறு இடங்களில் தெரிவித்திருந்தார்.

வடக்கு, கிழக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்த ஒரே குரலில் சொல்வோம். இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் சொல்வோம். அதை பொதுஜன அபிப்பிராய வாக்கெடுப்பு போன்று பாவிப்போம். சமஷ்டி தவிர வேறு எதுவும் வேண்டாம் என்பதற்கும் 13 மூலமாக சமஷ்டியை அடைவோம் என்ற இரண்டு நிலைப்பாடுகளுக்கு இடையில் மக்கள் வாக்களிக்கட்டும் என்ற மனோவின் யோசனை வடக்கில் பேசுபொருளாக தற்போது மாறியுள்ளது.

பல்வேறு தரப்பினரையும் சந்திக்கும் பாக்லே

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இந்­திய விஜ­யத்தில் எட்­டப்­பட்ட விட­யங்கள் தொடர்பில் இலங்­கைக்­கான இந்­திய உயர்ஸ்தா­னிகர் கோபால் பாக்லே பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து விளக்­க­ம­ளித்து வரு­கின்றார்.  தமிழ் தேசி­யக்­கட்­சி­களின் தலை­வர்­க­ளையும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் அவர் கடந்த வாரம் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார். இதன்­போது இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்­கு­மி­டையில் எட்­டப்­பட்ட உடன்­பா­டுகள் தொடர்­பிலும் அர­சியல் தீர்வு தொடர்பில் இந்­தி­யாவின் நிலைப்­பாடு குறித்தும் எடுத்­துக்­கூ­றி­யுள்ளார்.

இதே­போன்று பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­க­ளையும் அவர் சந்­தித்­தி­ருந்தார். சபா­நாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவையும் வெள்ளிக்கிழமை சந்தித்து தனது கருத்துக்களை பரிமாறியிருந்தார்.