4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் – பெண் விளக்கமறியலில்

210 0
மட்டக்களப்பு – காத்தான்குடியில் நான்கு வயது குழந்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான பெண் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தால் இந்த விளக்கமறியல் உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
படிக்கட்டில் இருந்து கீழே வீழ்ந்து காயமடைந்ததாக குறிப்பிட்டு குறித்த குழந்தை நேற்று முன்தினம் இரவு சந்தேகநபரான குறித்த பெண்ணால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு குறித்து குழந்தை இறந்ததாக நேற்று இடம்பெற்ற மரண விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.