கனடாவில் மாயமான தமிழர்: பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

113 0

கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போன விடயம் தொடர்பில் டொரண்டோ பொலிஸார் தகவல்களை வெளியிட்ட்டுள்ளனர்.

பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி “54 வயதான சிவதாஸ் இறுதியாக கனடா – ஒண்டாறியோவின் விண்ட்சர் நகரில் ஜூலை 31ஆம் திகதி காணப்பட்டார்” என கூறப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர் 5 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணாமல் போனவரின் பாதுகாப்பு குறித்து பொலிஸார் கவலை கொண்டுள்ளதாக குறித்த தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த நபர் தொடர்பில் தெரியுமாக இருந்தால் 416-808-4100-ஐ தொடர்பு கொள்ளலாம் டொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Gallery