கடத்தப்பட்ட கப்பல் மீட்கப்பட்டமை இராஜதந்திர வெற்றியாகும் – இலங்கை

211 0

இலங்கை பணியாளர்கள் 8 பேருடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் மீட்கப்பட்டமை உலக இராஜதந்திர அளவில் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக இந்தியப் பெருங்கடலில் உபாய ரீதியிலான முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கப்பல் மற்றும் அதில் இருந்த 8 பணியாளர்களை காப்பாற்றுவதற்காக அரசாங்கம் ராஜந்திர நடவடிக்கையை முன்னெடுத்தமை, கடத்தப்பட்ட கப்பலின் தலைவர் விடுத்த வேண்டுகோளின் பின்னரே

பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை கடற்படையை அழைத்து குறித்த நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை வழங்கினார்.

குறிப்பாக தாக்குதல் இன்றி கலந்துரையடால் மூலம் கடத்தப்பட்ட கப்பல் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது