நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களும் நல்லாட்சியின் சாட்சியங்களே – லக்ஸ்மன் கிரியல்ல

465 0

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களும் நல்லாட்சியின் சாட்சியங்களே என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதல் முறையாக இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து நல்லாட்சி ஒன்றை உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில், நல்லாட்சி அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் மாத்திரம் கடந்துள்ள நிலையில் போராட்டங்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

எனினும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நல்லதே என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கையை பொறுத்தவரையில் இதற்கு முன்னர் ஆட்சி செய்தவர்கள் அடக்கு முறை ஆட்சியையே மேற்கொண்டனர்.

எனினும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அவ்வாறு இல்லை.

மக்கள் சுதந்திரமாக செயற்படுகின்றனர் எனவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.