256 0

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளருக்கான கருத்தரங்கு(காணொளி)

 

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளருக்கான கருத்தரங்கு ஒன்று இன்று நடைபெற்றது.

சமுக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் அனுசரணையில் ஊடகவியலாளர்களின் உளவளத்துறை தொடர்பான கருத்தரங்கு நடாத்தப்பட்டது.

கருத்தரங்கினை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணவதி தெய்வேந்திரராஜா ஆரம்பித்து வைத்தார்.

கருத்தரங்கில் யாழ்ப்பாண மாவட்ட இலத்திரனியல் ஊடகம், அச்சு ஊடகம், மற்றும் நவீன ஊடகம் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்;.

சமுக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் உளவளத்துறையின் உத்தியோகத்தர் பி.அருமைத்துரை கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைகளை வழங்கினார்.