வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்; 21ஆவது நாளாக….(காணொளி)

421 0

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தின்போது, நான்காயிரம் கடிதங்கள் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் வவுனியாவில் இன்றுடன் 21ஆவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமது போராட்டத்திற்கு நீதி கோரி ஜனாதிபதிக்கு தபாலில் நான்காயிரம் கடிதங்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கடிதங்கள் மற்றும் முத்திரைப்பணத்துடன் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுவரும் நிலையில், இன்றும் ஆயிரம் கடிதங்கள் வவுனியா மத்திய தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக கையளிக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உண்ணாவிரதம் இருக்கும் கொட்டகையிலிருந்து நடைபவனியாக அஞ்சல் நிலையம் வரை சென்ற உண்ணாவிரதிகளும், ஆதரவாளர்களும் தபால் நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் கடிதங்களை கையளித்தனர்.