2024 ஆம் ஆண்டு முதல் பாடசாலை தவணைப் பரீட்சைகளைக் குறைத்து வருடத்திற்கு ஒரு பரீட்சையை மாத்திரம் நடாத்தவுள்ளதாக ஜயவர்தனபுரவில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பாடத் தொகுதியின் முடிவிலும் மதிப்பீடு நடாத்தப்பட்டு அதன் புள்ளிகள் கணினியில் பதிவு செய்யப்பட்டு வருட இறுதிப் பரீட்சையின் புள்ளிகளுடன் இணைக்கப்படும்.
வருங்காலத்தில், ஒரு தவணைக்கு ஒரு செயல்நூல் என, மூன்று தவணைகளுக்கான செயல்நூல்கள், மூன்று பகுதிகளாக மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இந்தத் திட்ட நடைமுறைப்படுத்தலுடன் தினமும் பாடசாலைக்கு சமூகமளிப்பதும் வகுப்பறையில் செயல்படுவதும் கட்டாயமாக்கப்படும். எனவே பிரத்தியேக வகுப்பு அல்லது மேலதிக வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் மாணவர்களுக்கு இருக்காது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதனால் பிள்ளைகளை தேவையற்ற போட்டிகளுக்காக தனியார் வகுப்புகளுக்கு அனுப்பி ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்யத் தேவையில்லை. தனியார் வகுப்புகளுக்கு செலவு செய்யும் பணத்தைப் பெற்றோர், பிள்ளைகளின் உணவுக்கு செலவு செய்யலாம். இதனால் இலவசக் கல்வியின் நோக்கம் பூர்த்தி செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் இம்முறையினால் மாணவர்களின் புத்தகப்பை சுமையைக் குறைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

