பிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்!

171 0

சிறீலங்கா இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் 17 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று (04.08.2023) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு கிளிச்சி பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிச்சிப்பகுதியில் குறித்த பணியாளர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்க பொருளாளர் திரு . கண்ணதாசன்
அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரை 1992 இல் மணலாறு பகுதியில் இடம்பெற்ற மோதலில் சாவடைந்த கப்டன் மணாளன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்தார். மலர்வணக்கத்தை கிளிச்சி தமிழ்ச்சோலை நிர்வாகி திருமதி சுபத்திரா ரவிச்சந்திரன்அவர்கள் செலுத்தியிருந்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து குறித்த 17 பணியாளர்கள் தொடர்பான நினைவுரைகள் இடம்பெற்றன. நினைவுரைகளை கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. க.சச்சிதானந்தம், பிரெஞ்சு மொழியில்
கிளிச்சி தமிழ்ச்சோலை மாணவி
செல்வி ரபிசா ரவிச்சந்திரன் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.

இவர்களுடன் ஏனைய கட்டமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், கிளிச்சி தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது நினைவு வணக்கத்தைச் செலுத்தியிருந்தனர்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)