தண்ணிமுறிப்பு குளத்தில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இராணுவத்தினர்

73 0

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குளம் பகுதியில் ஹெண்டர் வாகனத்தில் வந்திருந்த இராணுவத்தினர் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட பொலிஸார் துணை போகின்றனரா என சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சனிக்கிழமை (05) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்,

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் நானும் அவ்விடத்துக்கு கள விஜயம் செய்தபோது இராணுவத்தினர் மணல் அகழ்வில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

தண்ணிமுறிப்பு – குருந்தூர் மலை பகுதியில் பாதுகாப்பு கடமையில் நிற்கும் இரு பொலிஸார் மண் அகழ்வினை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றனர். இராணுவத்துக்கு ஒரு சட்டம், மக்களுக்கு இன்னொரு சட்டமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு, பொலிஸாரும் சட்ட விரோத மண் அகழ்வுக்கு உடந்தையாக செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.