இந்த சம்பவத்தின் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவரும் நிலையில், இது குறித்து சமூகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இராஜகிரிய பிரதேசத்தில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த வெலிக்கடை பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கடந்த 31ஆம் திகதி குறித்த சந்தேக நபரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், சந்தேக நபர் மஹரகம, நீலம்மஹர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

