வௌிநாடு செல்லத் தயாராகும் நாமல் ராஜபக்ஷ

309 0

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வௌிநாடு செல்ல, நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரோஷி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய டிசம்பர் 31ம் திகதி வரை இந்தத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

இம் மாதம் 23ம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரை வியட்நாமில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்ள வேண்டியுள்ளதாக, நாமல் ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலணைக்கு எடுத்துக் கொண்ட வேளையே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.