இந்தியாவிலிருந்து படகு மூலம் கடத்திவரப்பட்ட 375 கிலோகிராம் மஞ்சள் மீட்பு

45 0
கட்டுநாயக்க புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய திங்கட்கிழமை (31) நண்பகல் 12.30 மணியளவில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கடத்திவரப்பட்டு விற்பனை செய்யவிருந்த 375 கிலோ மஞ்சள் மேல் மாகாண புலனாய்வு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவின் பிரிவு மற்றும் அதிகாரிகள் நீர்கொழும்பு ஏத்துகால வீதியில்  சட்ட விரோதமாக கொண்டு  செல்லப்பட்ட போது குறித்த மஞ்சள் தொகையை கைப்பற்றியுள்ளனர். இதன்போது வாகனத்தை செலுத்தி சென்ற ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கெலிஓய பிரதேசத்தை சேர்ந்தவராவார். மேல்மாகாண புலனாய்வு பிரிவினர், விமானப்படை கட்டுநாயக்க முகாமின் புலனாய்வு பிரிவினர், நீர்கொழும்பு புலனாய்வு  பிரிவினர் ஆகியோர் இணைந்து சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு கடத்தி வரப்பட்ட மஞ்சளையும் கைப்பற்றியுள்ளனர்.