நீர்கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவின் பிரிவு மற்றும் அதிகாரிகள் நீர்கொழும்பு ஏத்துகால வீதியில் சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட போது குறித்த மஞ்சள் தொகையை கைப்பற்றியுள்ளனர். இதன்போது வாகனத்தை செலுத்தி சென்ற ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கெலிஓய பிரதேசத்தை சேர்ந்தவராவார். மேல்மாகாண புலனாய்வு பிரிவினர், விமானப்படை கட்டுநாயக்க முகாமின் புலனாய்வு பிரிவினர், நீர்கொழும்பு புலனாய்வு பிரிவினர் ஆகியோர் இணைந்து சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு கடத்தி வரப்பட்ட மஞ்சளையும் கைப்பற்றியுள்ளனர்.