யாழ்ப்பாணத்தில் ஜெனீவா மாநாடு தொடர்பான ஊடக சந்திப்பு

302 0

வடக்கு மாகாணசபையில் கடந்த 14ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் தொடர்பான பிரேரணை ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் நேரில் கையளிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா மாநாடு தொடர்பான ஊடக சந்திப்பு ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், எதிர்வரும் 20ம் திகதி இந்த பிரேரணை கையளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் 2 வருடங்கள் அவகாசம் வழங்க கூடாது எனக்கோரியும், ஏற்கனவே 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் வடமாகாணசபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை வடமாகாண சபையின் ஊடாக மனித உரிமைகள் ஆணையாளரிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.