குளவி கொட்டு, தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்!

339 0

நுவரெலியா மாவட்டம் லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பேர்ஹாம் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐந்து தோட்டத் தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. பேர்ஹாம் தோட்டத்தில் 10ம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளை, எதிர்பாராத விதமாக மரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்து இவர்களை தாக்கியுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்கான ஐவரும் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.