டெங்கு அச்சுறுத்தல் காரணமாக திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் 66 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கிண்ணியா கல்வி வலைய திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
கிண்ணியா பகுதியில் கடந்த 3 வாரங்களில் 13 பேர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தனர்.
மேலும் பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த 66 பாடசாலைகளும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கிண்ணியா கல்வி வலைய திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனிடையே, டெங்கு காய்ச்சல் அபாயம் குறித்து கிழக்கு மாகாண சபைக் கட்டிடத்தில் இன்று கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

