சிதைவுறும் தமிழ் அரசியல்

169 0
தமிழ்க் கட்­சி­களை தங்­க­ளுக்குள் மோதிக் கொள்ளச் செய்து விட்டு, ஜனா­தி­பதி ரணில்  விக்­கி­ர­ம­சிங்க சாவ­கா­ச­மாக இந்­தியப் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருக்­கிறார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆட்­சிக்கு வந்த பின்னர், தமிழ்த் தேசிய நிலைப்­பாட்டில் உள்ள கட்­சிகள் மத்­தியில் ஆழ­மான விரி­சல்கள் ஏற்­பட்டு, அவை கொள்கை முரண்­பா­டு­க­ளாக மாறத் தொடங்கி விட்­டன.

அதன் அடிப்­ப­டையில், ஒன்­றை­யொன்று பிய்த்து பிடுங்கும் நிலையும் உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

இந்­தியப் பிர­த­ம­ருக்கு கடிதம் அனுப்­பிய விட­யத்தில் ஒவ்­வொரு தரப்பும் தங்­களை நியா­யப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன.

13 ஆவது திருத்தச் சட்­டத்தை அமு­லாக்­கினால் போதும் என்­ற­ளவில், ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­ட­ணியும், தமிழ் மக்கள் கூட்­ட­ணியும் கடிதம் அனுப்­பி­யி­ருந்­தன.

அந்தக் கடித்தில், இரா.சம்­பந்தன் ஒப்­ப­மிட மறுத்தார். 13 ஆவது திருத்­தத்தை மட்டும் வலி­யு­றுத்­து­வதால் தான், இரா.சம்­பந்தன் அதில் ஒப்­ப­மி­ட­வில்லை என்ற கார­ணமும் கூறப்­பட்­டது.

இந்­த ­நி­லையில் இந்­தி­யாவை இரா.சம்­பந்தன் எதிர்க்­கிறார், இந்­தி­யாவின் தலை­யீட்டை அவர் விரும்­ப­வில்லை என்ற தோற்­றப்­பாட்டை உரு­வாக்க ஜன­நா­யக தமிழ் தேசியக் கூட்­ட­ணியின் தலை­வர்கள் முற்­பட்­டனர்.சில ஊட­கங்­களும் அவ்­வா­றான ஒரு விம்­பத்தை உரு­வாக்­கவே முற்­பட்­டன.

தற்­போது, இந்­தி­யா­வுக்குப் பின்னால் நிற்றல், அமெ­ரிக்கா உள்­ளிட்ட மேற்­கு­ல­கத்­துக்குப் பின்னால் நிற்றல் என்ற போட்டி ஒன்று தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளுக்கு மத்­தியில் உரு­வா­கி­யி­ருப்­ப­தாக தெரி­கி­றது.

தாங்கள் இந்­தி­யா­வுக்குப் பின்னால் நிற்­ப­தாக காட்டிக் கொள்ளும் தரப்­பினர், 13 ஆவது திருத்­தச்­சட்­டத்­துக்கு அப்பால் செல்ல இந்­தியா விரும்­பாது, இந்­தியா விரும்­பாத சமஷ்­டியை நாங்கள் வலி­யு­றுத்த முடி­யாது என்று நியா­யப்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

அதே­வேளை, 13 ஐ வலி­யு­றுத்த மறுக்கும் தரப்­பி­னரை அவர்கள் இந்­திய விரோ­தி­க­ளாக சித்­தி­ரிக்­கவும் முற்­ப­டு­கின்­றனர்.

இதன் மூலம், 13ஐ ஏற்­காத தரப்­பி­னரை இந்­தி­யா­விடம் இருந்து அந்­நி­யப்­ப­டுத்த முனை­கின்­றனர்.

அவர்கள் தமிழரசுக் கட்­சி­யி­னரை அமெ­ரிக்கா உள்­ளிட்ட மேற்­கு­ல­கத்­துக்குப் பின்னால் இருப்­ப­தாக கரு­தி­னாலும், பிராந்­திய அர­சியல் விவ­கா­ரங்­களில் இந்­தி­யாவும் அமெ­ரிக்­காவும் ஒத்த நிலைப்­பாட்­டி­லேயே இருக்­கின்­றன என்­பதே உண்மை.

இந்­தி­யாவை மீறிச் செயற்­படும் நிலையில் அமெ­ரிக்கா இல்லை. அவ்­வாறு செயற்­பட விரும்­பி­யி­ருந்தால், 1980களில் ஜே.ஆர்.ஜய­வர்த்­தன அர­சாங்கம் ஆட்­சியில் இருந்த போதே, அமெ­ரிக்கா இங்கு தளம் ஒன்றை அமைத்­தி­ருக்கும்.

இந்­திய-– அமெ­ரிக்க உற­வுகள் அதிகம் நெருக்­க­மில்­லாமல் காணப்­பட்ட அத்­த­கைய சூழ­லி­லேயே இந்­தி­யாவைப் பகைக்க அமெ­ரிக்கா விரும்­ப­வில்லை.

இப்­போது இந்­தி­யா­வுக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் அர­சியல், இரா­ஜ­தந்­திர, பாது­காப்பு, மூலோ­பாயக் கூட்­டு­களும் உற­வு­களும் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன.

கடை­சி­யாக இந்­தி­யாவில் அமெ­ரிக்­காவின் போர்க்­கப்­பல்­களை பழுது பார்த்து புதுப்­பிப்­ப­தற்­கான ஐந்து ஆண்டு ஒப்­பந்­தமும் கையெ­ழுத்­தி­டப்­பட்­டுள்­ளது.

எண்ணூர் அருகே, காட்­டுப்­பள்­ளியில் அமைந்­துள்ள தளத்தில் அமெ­ரிக்க போர்க்­கப்­பல்­களை  பழு­து­பார்க்கும் பணி­களும் தொடங்­கப்­பட்டு விட்­டன.

இந்­த­ள­வுக்கு அமெ­ரிக்க,- இந்­திய உற­வு­களில் நெருக்கம் காணப்­படும் நிலையில், தமிழ்க் கட்­சிகள்  அமெ­ரிக்­காவின் ஆள் என்றும், இந்­தி­யாவின் ஆள் என்றும்,  இந்­திய விரோதி என்றும் ஒரு­வரை ஒருவர் பார்த்து மோதிக் கொண்­டி­ருப்­பது தான் வேடிக்கை.

இவ்­வா­றான நிலையில் அமெ­ரிக்க தூதுவர் ஜூலி சங்­கு­ட­னான சந்­திப்பின் போது, இந்­தியப் பிர­த­ம­ருக்கு தனி­யான கடிதம் அனுப்ப நேரிட்­ட­மைக்­கான கார­ணத்தை நாடா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

13 ஆவது திருத்­தச்­சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தும்­படி இலங்கை அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுக்­கு­மாறு, இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடிக்கு,  ஆறு தமிழ் கட்­சி­களின் தலை­வர்கள் முன்னர் கடிதம் அனுப்பி இருந்­தனர்.

அந்தக் கடிதம் அனுப்­பப்­பட்ட பின்னர், தமிழர் பிரச்­சி­னைக்­கான தீர்வு குறித்த இந்­தி­யாவின் நிலைப்­பாட்டில் மாற்றம் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக சுமந்­திரன் கூறி­யி­ருக்­கிறார்.

முன்­ன­தாக இந்­தியா பதின்மூன்­றா­வது திருத்தச் சட்டம் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்றும், தமிழர் பிரச்­சி­னைக்­கான தீர்­வாக அதி­க­பட்ச அதி­கா­ரப்­ப­கிர்வு இருக்க வேண்டும் என்றும் நிலைப்­பாட்டை கொண்­டி­ருந்­தது.

அந்தக் கடிதம் அனுப்­பப்­பட்ட பின்னர் இந்­தியா அதி­க­பட்ச அதி­கா­ரப்­ப­கிர்வு விட­யத்தை வலி­யு­றுத்­தாமல், 13ஆவது திருத்தச் சட்­டத்தை மாத்­திரம் வலி­யு­றுத்­து­கி­றது, இது தமி­ழர்­க­ளுக்­கான ஒரு பின்­ன­டைவு என்றும் சுமந்­திரன் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

தமிழர் பிரச்­சி­னைக்­கான தீர்வு 13ஆவது திருத்தச் சட்டம் தான் என்று இந்­தியா கூறி­யி­ருந்­தாலும்,  அவ்­வப்­போது அதி­க­பட்ச அதி­கா­ரப்­ப­கிர்வு குறித்தும் கருத்­துக்­களை வெளி­யிட்டு வந்­தது.

தமிழ்க் கட்­சி­களின் கடி­தத்­திற்கு பின்னர் 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு அப்பால் செல்­வது பற்­றிய இந்­திய  நிலைப்­பாடு மாற்­ற­ம­டைந்­தி­ருப்­பது உண்­மை­யானால், அந்த நிலைப்­பாட்­டுக்கு பொறுப்­புக்­கூற வேண்­டி­யது தமி­ழ­ரசுக் கட்சி உள்­ளிட்ட கடி­தத்தில் கையெ­ழுத்­திட்ட அத்­தனை தமிழ்க் கட்­சி­களும் தான்.

அதி­கா­ரப்­ப­கிர்வு விட­யத்தில் இந்­திய நிலைப்­பாடு மாறி இருந்தால் அது தமிழர் பிரச்­சினை தொடர்­பான அணு­கு­மு­றை­களில் ஏற்­பட்­டுள்ள ஒரு பின்­ன­டைவு தான்.

இதன் அடிப்­ப­டையில் தான் தமி­ழ­ரசுக் கட்சி 13 ஆவது திருத்தச் சட்­டத்தை மாத்­திரம் வலி­யு­றுத்­தாமல்,  அதி­கா­ரப்­ப­கிர்வு தொடர்­பான வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்டும் என்று ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு அழுத்தம் கொடுக்­கு­மாறு  கடி­தத்தில் வலி­யு­றுத்தி இருக்­கி­றது.

அதே­வேளை, சமஷ்டி தீர்வு தொடர்­பாக, அந்த கடி­தத்தில் இரா.சம்­பந்தன் சுட்டிக் காட்­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டைக் கிளப்­பி­யி­ருக்­கிறார் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார்.

தமிழர் பிரச்­சினை தீர்வு தொடர்­பாக இந்­தி­யா­வுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­மாறு ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு அழுத்தம் கொடுக்­கு­மாறு தான் இரா.சம்­பந்தன் கோரி­யி­ருக்­கி­றாரே தவிர, சமஷ்­டியை வலி­யு­றுத்­த­வில்லை.

13 ஆவது திருத்­தச்­சட்ட அமு­லாக்­கத்­தையும், மாகா­ண­சபைத் தேர்­த­லையும் தான் இந்­தியா வலி­யு­றுத்­தி­யது, அதற்கு இலங்கை வாக்­கு­று­தியும் கொடுத்­தது.

எனவே, மறை­மு­க­மாக 13 ஆவது திருத்தச் சட்­டத்­தையே தமி­ழ­ரசுக் கட்சி வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றது என்­பது கஜேந்­தி­ர­கு­மாரின் குற்­றச்­சாட்டு.

தமிழர் பிரச்­சினை தொடர்­பாக தமிழ்க் கட்­சிகள் ஒத்த நிலைப்­பாட்டில் இல்லை, தீர்வு தொடர்­பா­கவும் ஒத்த கருத்து கிடை­யாது.

இந்­தி­யா­வுக்குப் பின்னால் போகவே பெரும்­பா­லான கட்­சிகள் விரும்­பு­கின்­றன. இந்­தியா விரும்­பாத  எதையும் செய்­வ­தற்கும் தயா­ராக இல்லை.

அவ்­வாறு நோக்­கினால் கஜேந்­திர குமாரின் குற்­றச்­சாட்டு மெய்­யா­னதே.

அதே­வேளை, ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­ட­னான சந்­திப்பில், 13ஆவது திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­மாறும் கேட்­க­மாட்டோம், அதனை நிரா­க­ரிக்­கவும் மாட்டோம் என்று நழு­வ­லான பதிலைக் கூறி­யி­ருந்தார் சுமந்­திரன்.

ஆக, தமிழ்த் தேசியக் கட்சிகள் இப்போது, ஒரு இனத்தின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான தகை மையை இழந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்ச் சமூகத்தின் பாரிய உயிர்த் தியாகங்கள், போராட்டங்களுக்குப் பின்னர், கிடைக்கும் வாய்ப்புகளை அவை சிதைத்துப் பலவீனப்படுத்துகின்றன.

அற்ப அதிகாரங்களுக்குள் தங்களின் அபிலாசைகளை சுருக்கிக் கொண்டு, இந்தியாவையோ, அமெரிக்காவையோ திருப்திப்படுத்தினால் போதும் என்றளவில் சிந்திக்கத் தொடங்கி விட்டன.

மக்களின் உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் திறன், ஆளுமை அவர்களிடம் இல்லாதமையே இந்த நிலைக்கு காரணம்.

சமஷ்டிக்கான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுக்கும் ஒரு தலைமைத்துவமும், அமைப்பும் தோற்றம் பெறும் வரையில், இந்த அரசியல் சிதைவுகள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கும்.

 கபில்