கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

250 0

வத்தளை மற்றும் ஹெட்டி வீதி பகுதியில் வைத்து கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸார் நேற்று (14) இரவு மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்த வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.