மேல் மாகாணத்தின் தனியார் பேரூந்துகளில் பயணிகளுக்கான பயண அனுமதிச் சீட்டு இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

336 0
மேல் மாகாணத்தில் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கான பயண அனுமதிச் சீட்டு இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் இதனை நடைமுறைப்படுத்துவதாக மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர் துஷித குலரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பயணிகளுக்கு பயண அனுமதிச் சீட்டு வழங்குவது குறித்து பேருந்து சங்கங்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
பயணிகளுக்கான பயண அனுமதிச் சீட்டை கட்டாயமாக்குவதற்கு முன்னர், தனியார் பேருந்து சேவையை பலப்படுத்த வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.