கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்கள் தொடர்கின்றன

223 0
காணாமல் போனோருக்கு நீதி கோரி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலும், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவும் இரண்டு வாரங்களுக்கு மேலாக இந்த போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், முல்லைத்தீவு கேப்பாபுலவு காணி விடுவிப்பு தொடர்பான போராட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகளை விடுவிக்க கோரி இரண்டு வாரங்களுக்கு மேலாக பிரதேச பொதுமக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.