மெக்சிகோவில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்து: 4 பேர் பலி

225 0

மெக்சிகோவில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் மீட்புக்குழுவினர் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிக்கோவின் வடக்கு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் மலை ஏறும் வீரர் ஒருவர் காணாமல் போனார். அவரை மீட்க தேடும் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டரும் விபத்தில் சிக்கியது.
மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். மெக்சிக்கோவிற்கு வடக்கு பகுதியில் உள்ள பாஜா கலிபோர்னியாவின் மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 2 விமானிகள் மற்றும் உள்ளூர் மீட்புக் குழுவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக தகவல் வந்துள்ளது. மலைப்பகுதியில் உள்ள கேபிள் மின்இணைப்பு மீது மோதியதில் நிலைகுலைந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அதனைத்தொடர்ந்து வெடித்துச் சிதறியதால் அதில் பயணம் செய்த நால்வரும் உயிரிழந்தனர். அவர்களது உடலை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.