மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்…(காணொளி)

264 0

 

ஜெனீவாவில் 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை அவவைத்தவைர் சீ.வி.கே.சிவஞானத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் ஜெனீவா தீர்மானம் தொடர்பான விசேட அமர்வு வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் தலைமையில் இன்று நடைபெற்ற போது எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவாஜிலிங்கத்தினால் கொண்டு வரப்பட்ட பிரேரணையை எதிர்க்கட்சித்தலைர் சி.தவராசா நடுநிலைத்தன்மையோடும், எதிர்க்கட்சி உறுப்பினர்களான தர்மபால செனவிரட்ன மற்றும் அனிகமகே ஜெயதிலக்க ஆகியோரின் எதிர்ப்புக்களை பதிவு செய்து நிறைவேற்றப்பட்டுள்ளது.