பொரளையில் சோதனை நடவடிக்கை : 13 பேர் கைது !

163 0

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில்  விசேட  சோதனை நடவடிக்கை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஞயிற்றுக்கிழமை (16) அதிகாலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபர்களில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவரும் பிடியாணை பிறபிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவரும் அடங்கியுள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது பொரளை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.