காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு தென்னிலங்கை அமைப்பு ஆதரவு

224 0

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 23 வது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் தென்னிலங்கையில் இருந்து செயற்ப்படுகின்ற அமைப்பான சுதந்திரத்திற்கான மகளீர் அமைப்பு ஆதரவினை வழங்கி உள்ளது.

அத்துடன் , சம உரிமை இயக்கம் மற்றும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு என்பனவும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவினை வழங்கும் முகமாக கந்தசாமி கோவில் முன்றலில் 23 வது நாளாகவும் நடைபெற்றுக்கொண்டுள்ள போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.