ஜெனீவா யோசனை தொடர்பில் வடமாகாண சபையின் பிரேரணை நிறைவேற்றம்

245 0

ஜெனீவா யோசனை தொடர்பில் வடமாகாண சபையின் விசேட அமர்வு ஒன்று இன்று இடம்பெற்றது.

2015ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுலாக்க அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது என தெரிவித்து மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தினால் முன்வைக்கப்பட்ட குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எம்.கே. சிவாஜிலிங்கம் இவ்வாறு கருத்துரைத்தார்.